வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

September 20, 2014

மழையில் நனையும் அறிவியல்



இப்போது நான் சொல்லப் போவது, ரொம்பப் பெருசா ஒன்னுமில்ல. சின்னத் தகவல்தான். உங்கள் அன்றாட வாழ்க்கையுடன் இணைந்த ஒரு சிறிய அறிவியல் தகவல். நம்ப முடியாமல் இருந்தாலும், உண்மையானது. கணிதச் சமன்பாடுகளால் நிறுவப்பட்டது.


மழை பெய்யும் போது, கையில் குடையில்லாவிட்டால் மழைபடாத ஓரிடத்தில் ஒதுங்கியிருப்பீர்கள். நீங்கள் செல்ல வேண்டிய இடம், ஐம்பது அடிக்கும் குறைவான தூரத்தில் உங்களுக்கு முன்னாலேயே இருக்கும். ஆனாலும் பெருமழையில் நனைந்து விடுவீர்கள் என்பதால், மழை விடும்வரை அல்லது குறையும்வரை காத்துக் கொண்டிருப்பீர்கள். சிறிது நேரத்தில், பெருமழை குறைந்து சிறுதூறலாகப் பெய்ய ஆரம்பிக்கும். காத்திருந்து பொறுமையிழந்ததால், அந்தச் சிறுதூறலிலேயே செல்ல வேண்டிய இடத்துக்கு ஓடிப் போய்விடலாம் என்று நினைப்பீர்கள். மழைக்குள் இறங்கி ஓடவும் செய்வீர்கள்.


ஆனால், மழையில் சிறு தூரங்களைக் கடக்கும் போது, ஓடிச் செல்வதைவிட நடந்து செல்லும் போதுதான் நாம் குறைவாக நனைவோம் என்பது உங்களுக்குத் தெரியுமா?


நாம் நினைத்துக் கொள்வது என்னவென்றால், "நடந்து செல்வதைவிட ஓடிச் சென்றால் மழையில் நனைவது குறைவாக இருக்கும்" என்பதுதான். மூளையும் அதுவே சரியாக இருக்கும் என்றுதான் எண்ணிக் கொள்ளும். ஆனால், நடந்து செல்லும் போது நம்மில் படும் மழைத்துளிகளை விட, ஓடிச் செல்லும் போதே அதிக மழைத்துளிகள் படுகின்றன.




No comments:

Post a Comment