வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

July 24, 2014

நியூட்ரீனோஸ்.. (Neutrinos)



நான் சொல்வதைக் கொஞ்சம் செய்து பாருங்கள். அல்லது கற்பனை செய்து பாருங்கள்.


உங்கள் வலது உள்ளங்கையை நீட்டியபடி விரித்துப் பிடியுங்கள். இப்போது, உள்ளங்கையின் மத்தியில் சிறிது தண்ணீரை ஊற்றுங்கள். என்ன நடக்கும்? கையில் தண்ணீர் அப்படியே தங்கிய நிலையில் இருக்கும், அப்படித்தானே?


சரி, கையை நன்றாகத் துடைத்துவிட்டு, கைகளில் சிறிது மணலை எடுத்துச் சிறிது சிறிதாக கொட்டுங்கள். இப்போது மணலும் கைகளிலேயே இருக்கின்றன அல்லவா? இது போலவே முகத்துக்குப் பூசும் பௌடரைக் கொட்டுங்கள் அதுவும் கைகளிலேயே இருக்கும் இல்லையா?


"ஆமாம்! என்ன பெரிய உலக மகா அதிகசயத்தைச் சொல்வது போல இவர் சொல்கிறார்? உள்ளங்கையில் கொட்டப்படும் எல்லாமே உள்ளங்கையில்தான் இருக்கும். இதெல்லாமா பெரிய பிரச்சனை?” இது இப்போ நீங்கள் உங்கள் மனதில் நினைப்பது. நீங்க எப்படியும் நினைச்சுக்குங்க. நான் சொல்வதைத் தப்பாவே புரிஞ்சுக்கிறதுதானே உங்கள் வேலையே! பரவாயில்லை, நான் சொல்ல வந்ததைச் சொல்லிவிடுகிறேன்.


நியூட்ரீனோஸ்.. நியூட்ரீனோஸ்… (Neutrinos) என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களல்லவா? அந்த நியூட்ரீனோஸைக் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதை உங்கள் உள்ளங்கைகயில் கொட்டுங்கள். இப்போது பார்த்தீர்களானால், அந்த நியூட்ரீனோஸ், உங்கள் உள்ளங்கைகளினூடாக வழிந்தபடி கீழே விழும். அப்படியொரு காட்சியை உங்களால் நம்பவே முடியாது. அதாவது கைகளைத் துளைத்தபடி, கைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அது உங்கள் கைகளூடாகக் கீழே விழும். அதுமட்டுமல்ல………


விண்வெளியிலிருந்து நியூட்ரீனோஸ்கள் ஒவ்வொரு கணமும் கோடி கோடியாகப் பூமியை நோக்கி வந்து பூமியின் மேற்பரப்பை அடைந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவை பூமியை முழுமையாக ஊடுருவிக் கொண்டு கீழே சென்று பூமிக்கு வெளியே அப்படியே கொட்டப்படுகின்றன. பூமியில் எங்கும் அவை தங்கிவிடாது. ஒளிகூட, பூமியை ஊடுருவவோ, உள்ளங்கைகளை ஊடுருவவோ முடியாமல் இருக்க, நியூட்ரீனோஸ் இவையெல்லாவற்றையும் ஊடுருவிக் கொண்டு செல்கிறன. இதன் காரணம் என்ன தெரியுமா? சொல்கிறேன்……!


நியூட்ரீனோஸ் என்பவை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பச் சிறியவை. ஒரு அரிக்கும் தட்டில் மாவைக் கொட்டி அரிக்கும் போது, அரிதட்டில் உள்ள துளையின் பருமனைப் பொறுத்து அதனுடாக மா கீழே விழ, மற்றவை அரிதட்டில் எஞ்சியிருக்கும் அல்லவா? அது போலத்தான், எங்கள் கைகளில் உள்ள தோலின் கலங்களை, ஊடுருவிக் கொண்டு செல்லக் கூடிய அளவுக்கு அநேகப் பொருட்களால் முடியாது. கலங்கள் அந்த அளவுக்குச் சிறியவை. ஆனால், தோலில் உள்ள கலங்கள் அணுக்களால் ஆனவை. அந்த அணுக்கள், அணுக்கருவாலும் அதைச் சுற்றும் எலெக்ட்ரானாலும் ஆனவை. அணுக்கருவுக்கும், எலெக்ரானுக்குமிடையில் இருப்பது ஒரு வெறுமையான இடைவெளி. நியூட்ரீனோஸ் என்பவை அணுக்கருக்களுக்கும் எலெக்ட்ரான்களுக்குமிடையிலுள்ள மிக மிக சிறிய இடைவெளியினூடாகச் செல்லக் கூடிய அளவுக்குச் சிறியவை.


ஒரு நியூட்ரீனோஸ், 0.0000000000000000000001 மிமீ அளவுள்ளது. அதாவது பத்தின் மைனஸ் 22 அடுக்குகள் மில்லிமீட்டர் (10^ -22mm). அணுவிலுள்ள அணுக்கருவுக்கும் எலெக்ட்ரானுக்கும் இடையில் உள்ள இடைவெளியின் அளவு, நியூட்ரீனோஸின் அளவை விட 10000000000 மடங்கு பெரியது. நியூட்ரீனோஸ் எவ்வ்வ்வ்வ்வளவு சிறியது என்று இப்போது புரிகிறதா?


அண்டத்திலுள்ள கருந்துகள்கள் (Dark matter), நியூட்ரீனோஸை விட ரொம்ம்ம்ம்ம்பச் சிறியது என்று சொல்கிறார்கள். அதனால்தான் நம்மால் அதைப் பற்றி இதுவரை அறிய முடியவில்லை.


அப்பாடா! முடிந்தவரை சொல்லியிருக்கிறேன். கொஞ்சம் கடுமையான விசயம்தான். புரிந்து, சிந்திப்பீர்களென்றால் மிகப்பெரிய அறிவியல் தகவல் இது என்பது தெரியவரும்.




1 comment:

  1. அருமை
    பொருமையாகப்படித்துப் புரிந்துகொள்ளவேண்டும்

    ReplyDelete